முன்னாள் அமைச்சர் வேலுமணி இல்லத்தில் சோதனை நடத்தியது அரசியல் காழ்புணர்ச்சி – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

 
முன்னாள் அமைச்சர் வேலுமணி இல்லத்தில் சோதனை நடத்தியது அரசியல் காழ்புணர்ச்சி – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்த தமிழ் கையேட்டினை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னைை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேட்டியளித்த அண்ணாமலை

ஆகஸ்ட் 25 ம் தேதி ஒரு நாள் முழுவதும் விவசாயிகளை சந்தித்து பாஜக பேச இருக்கிறது. உழவர்களுடன் ஒரு நாள் என்ற பெயரில் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்தும் நிகழ்வாக சந்திப்பு நடைபெறும்.

முன்னாள் அமைச்சர் இல்லங்களில் சோதனை நடத்தியது. அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பது மக்களுக்கு வெளிப்படையாகவே தெரிகிறது. வழக்கு தொடர்பாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே இந்த சோதனை தேவையானதா அல்லது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா என தெரியவரும்.

தமிழக அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய இருப்பது தவறில்லை, வரவேற்கிறோம். ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு அரசின் திட்டங்கள் செயல்முறைகள் என்னென்ன என்பதை பொறுத்து பாஜக கருத்து சொல்லும். வேளாண் சட்டம் விவகாரத்தில் அரசியல் கட்சியினர் வேண்டுமென்றே அரசியல் செய்கின்றனர் விவசாயிகள் இந்த சட்டத்தை வரவேற்கின்றனர் என தெரிவித்தார்.

From around the web