71 கைதிகள், 4 ஊழியர்கள் உள்பட 75 பேருக்கு கொரோனா

 
71 கைதிகள், 4 ஊழியர்கள் உள்பட 75 பேருக்கு கொரோனா

ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள குனுப்பூர் சிறைச்சாலையில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள மொத்தம் 113 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், அந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், சந்தேகமடைந்த சிறைத்துறை அதிகாரிகள் கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்தனர்.

அதன்படி, சுகாதாரத்துறை அதிகாரிகள் கைதிகள் மற்றும் சிறைத்துறை ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். அதில், மொத்தம் உள்ள 113 கைதிகளில் 71 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்கள் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, கொரோனா தொற்று பாதித்த 75 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் தொடர்ந்து மருத்துவ குழுவின் கண்காணிப்பில் உள்ளனர்.

From around the web