உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண்சிங் உடல் நிலை கவலைக்கிடம்
Jul 22, 2021, 08:49 IST
உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் கவர்னருமான கல்யாண்சிங் (89), கடந்த 4-ந் தேதி லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோய்த்தொற்று மற்றும் சுயநினைவு குறைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில், மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்
‘‘20-ந் தேதி மாலையில் இருந்து கல்யாண்சிங்குக்கு உயிர் காக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவரது முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாட்டை சிறப்பு மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள். மருத்துவமனை இயக்குனர் திமான், சிகிச்சை முறைகளை நாள்தோறும் கண்காணித்து வருகிறார்’’ என்று கூறப்பட்டுள்ளது.
From around the
web