அதிமுக யார் கையில்?! ஓபிஎஸ், ஈபிஎஸ் நேரில் ஆஜராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
அதிமுக  யார் கையில்?! ஓபிஎஸ், ஈபிஎஸ் நேரில் ஆஜராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நின்னா குத்தம்? படுத்தா குத்தம்? என்கிற கணக்காக அதிமுக சென்று கொண்டிருக்கிறது. சசிகலாவிடம் யார் பேசினாலும் அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்கள். ஆனால், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் எல்லா மாவட்டங்களில் இருந்தும் சசிகலாவுடன் பேசத் தான் செய்கிறார்கள். வாரம் ஒரு ஆடியோவாக ரிலீஸாகி கொண்டுதானிருக்கிறது. கட்சியில் இருந்து நீக்கப்படும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் பெங்களூரு புகழேந்தி.

அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து, அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆஜராக எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு புகழேந்தியை நீக்கி வெளியிட்ட கூட்டறிக்கையில், அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் நீக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிமுக  யார் கையில்?! ஓபிஎஸ், ஈபிஎஸ் நேரில் ஆஜராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மேலும் கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் அதிமுக செய்தி தொடர்பாளர், கழக புரட்சித்தலைவி பேரவை இணை செயலாளர் புகழேந்தியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக குறிப்பிட்டிருந்தனர்.

தன்னை நீக்கிய உத்தரவில் தன்னை பற்றிய கருத்துகள், தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்கக்கோரி சென்னை எம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அலீசியா முன்பு விசாரணைக்கு வந்த போது, வழக்கு குறித்து ஆஜராகி விளக்களிக்க ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 24ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

From around the web