நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு! அமைச்சர் சுப்பிரமணியன் கோரிக்கை!

 
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு! அமைச்சர் சுப்பிரமணியன் கோரிக்கை!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் டெல்லிக்கு சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து மேற்கொண்ட ஆலோசனை முடிவில், தமிழகத்திற்கான 1 கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடு செய்து வழங்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

பின்னர் தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்து, “முதல்வரின் வழிகாட்டுதலின் படி, இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்குமாறு வலியுறுத்தியதாக” தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

From around the web