கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது ! சசிகலா ஆவேசம்!

 
கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது ! சசிகலா ஆவேசம்!


சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. இதற்கு பிறகு கட்சியில் உட்கட்சி பூசல் மற்றும் மோதல் போக்கு வெட்டவெளிச்சமானது. ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி எழுந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி, துணை எதிர்க்கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் என தேர்வு செய்யப்பட்டனர் அதிமுக கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்வானார்.

கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது ! சசிகலா ஆவேசம்!


இதனிடையே, சசிகலா தொடர்ந்து தொண்டர்களுடன் பேசி வரும் நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பி. உள்பட 16 பேர் அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டதும் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது ! சசிகலா ஆவேசம்!


இந்நிலையில், மதுரையை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆதரவாளரிடம் சசிகலா நேற்று மீண்டும் பேசியுள்ளார். அவருடன் பேசிய சசிகலா கட்சிக்காரர்கள் எல்லாம் மிகவும் வருத்தப் படுகிறீர்கள். தொண்டர்கள் எல்லாரும் என்னுடன் இருக்கும்போது, கட்சியை அழிய விடமாட்டேன். விரைவில் தொண்டர்களை சந்திக்க வருவேன் எனத் தெரிவித்துள்ளார்.

1987ல் எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சினையை உடன் இருந்து எதிர் கொண்டுள்ளேன். அதில் இருந்து மீண்டு வந்து தான் அதிமுக ஆட்சி அமைத்தோம். எனவே, இவர்கள் செய்வது எல்லாம் எனக்கு புதிது இல்லை. ஜெயலலிதா போல நாமும் தொண்டர்களுடன் வந்து கட்சியையும், ஆட்சியையும் மீட்போம். கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது என சசிகலா சூழுரைத்துள்ளார்.

From around the web