அதிரடி அறிவிப்பு! இன்று முதல் பார்களை திறக்க அனுமதி!

 
அதிரடி அறிவிப்பு! இன்று முதல் பார்களை திறக்க அனுமதி!


இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து பாதிப்பு குறைவுகளின் அடிப்படையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது.மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

அதிரடி அறிவிப்பு! இன்று முதல் பார்களை திறக்க அனுமதி!


அந்த வகையில் சில தினங்களாகவே தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 165 பேர். தற்போது மேலும் குறைந்திருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

அதிரடி அறிவிப்பு! இன்று முதல் பார்களை திறக்க அனுமதி!

பாதிப்பு விகிதம் 0.18 சதவீதமாக குறைந்துள்ளது.தற்போது மாநிலம் முழுவதும் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,372 பேர் என்ற அளவில் உள்ளது.இதனிடையே டெல்லியில் கொரோனா முடிவுக்கு வரும் நிலையில் உள்ளதால் தற்போது மிகப் பெரியளவில் தளர்வுகளை அறிவித்துள்ளது அம்மாநில அரசு

மெல்ல மெல்ல மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது டெல்லியில் 50% பேர் அமர்ந்திடும் வகையில் மதுபான பார்களை இன்று முதல் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மதுபானப்பிரியர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

From around the web