தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி ஒதுக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

 
தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி ஒதுக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

தமிழகத்திற்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

தமிழகத்திற்கான கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாததால், மாநிலம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தடுப்பூசிக்கான தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது.

தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யவும் தமிழக மக்கள் தொகை அடிப்படையில் சரியான அளவில் தடுப்பூசிகளை கிடைத்திடவும், தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக அளித்திட வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

From around the web