பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்! தமிழக அரசு!

 
பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்! தமிழக அரசு!


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று வருபவர்களில் பேரறிவாளன் ஒருவர். இவர் சிறையில் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு 30 நாள்கள் பரோல் வழங்க அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்! தமிழக அரசு!


இதன் அடிப்படையில் மே 28 முதல் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டு சென்னை புழல் சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே ஜூன் 19 முதல் பேரறிவாளனுக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. தொடா் சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதால் மீண்டும் பரோல் நீட்டிப்பு செய்ய வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்! தமிழக அரசு!


இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. ஏற்கனவே ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒரு மாதத்திற்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web