செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்

 
செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்

கொரோனா தொற்று 2வது அலைக்கு மத்தியில், 75-வது சுதந்திர தினம் கட்டுபாடுகளுடனும், அதே நேரத்தில் வழக்கமான உற்சாகத்தோடும் நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உள்ள மாகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்

பிரதமர் நரேந்திர மோடி 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் செங்கோட்டையில் இன்று காலை மூவர்ணக்கொடியேற்றி வைத்து, வீர வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து நாட்டு மக்களுக்கு அவர் சுதந்திர தின உரையை ஆற்றி வருகிறார்.

செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்

இந்த விழாவில் மூத்த மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பதக்கங்களைப் பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டனர்.

From around the web