தமிழகம் முழுவதும் ஜுலை 5ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் !

 
தமிழகம் முழுவதும் ஜுலை 5ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் !


இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிகரித்து வருகிறது. அத்துடன் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டமும் மக்களுக்கு எதிராக உள்ளது. இது போன்ற மேலும் கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை 5 ம் தேதி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


இது குறித்து விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் ஹட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்தும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கட்டுமான பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், மின்சாரம் போன்ற விலைவாசி உயர்வை கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும், இந்த ஆர்ப்பாட்டம் ஜுலை 5 ம் தேதி காலை 10 மணிக்கு , அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் காவல்துறை அனுமதியுடன் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web