தமிழக உள்ளாட்சி தேர்தல்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று மாலை அவசர ஆலோசனை

 
தமிழக உள்ளாட்சி தேர்தல்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று மாலை அவசர ஆலோசனை

மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதன் காரணமாக குறிப்பிட்ட 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை. நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த 9 மாவட்டங்களிலும் வார்டு மறுவரையறை போன்ற பல்வேறு பணிகள் நடத்தப்படாமல் இருந்ததால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

செப்டம்பர் 15க்குள் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம், தமிழக தேர்தல் ஆணையத்துக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

செப்டம்பர் 15ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஆலோசனை நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது.

From around the web