குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டும் – ப.சிதம்பரம்

 
குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டும் – ப.சிதம்பரம்

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் தலைவர்களுடன் நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்குமாறு தலைவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டும் – ப.சிதம்பரம்

இந்த சந்திப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னனி தலைவர்களுள் ஒருவரான முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் “காங்கிரஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் முதலில் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், பின்னர் தேர்தல்களை நடத்த விரும்புகிறார்கள். ஆனால் மத்திய அரசோ முதலில் தேர்தல், பின்னர் மாநிலம் அந்தஸ்து என்று கூறுகிறது.

குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டுமே தவிர, வண்டியால் குதிரையை இழுக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

From around the web