மாநாடு படக்குழுவுக்கு வேலூர் இப்ராஹிம் எச்சரிக்கை! காட்சிகளை நீக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்

 
மாநாடு படக்குழுவுக்கு வேலூர் இப்ராஹிம் எச்சரிக்கை! காட்சிகளை நீக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்

நடிகர் சிம்பு நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசியச் செயலர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மாநாடு படக்குழுவுக்கு வேலூர் இப்ராஹிம் எச்சரிக்கை! காட்சிகளை நீக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது குறித்து பேசுகையில், ‘மாநாடு திரைபடத்தில் பல காட்சிகள் சர்ச்சைகுரியவையாக இருக்கின்றன. காவல் துறையை இழிவுபடுத்தும் காட்சிகள், இஸ்லாமிய மக்களுக்கு எதிராக காவல் துறையை சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதை அனுமதித்தால் காவல்துறையினரை சிறுபான்மை மக்களின் எதிரிகளாக ஊக்குவிக்கும் தீவிரவாதிகளின் போக்கு பலமாகும். எனவே, அத்தகைய காட்சிகளை நீக்கவோ அல்லது படத்தை தடை செய்யவோ வேண்டும். மத்திய தணிக்கை குழு அனுமதி அளித்திருந்தாலும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மாநாடு படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் சிம்பு ஆகியோர் வீடுகளின் முன்பு பாஜக சிறுபான்மை அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்’ என கூறியுள்ளார்.

From around the web