ஆசிய குத்துச்சண்டை போட்டி: தங்கம் வென்ற பூஜாராணி

 
ஆசிய குத்துச்சண்டை போட்டி: தங்கம் வென்ற பூஜாராணி

துபாயில் மே 24 ஆம் தேதி தொடங்கிய, இன்று 31-ந் தேதி வரை நடைபெறும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் உள்பட 17 நாடுகளை சேர்ந்த 150 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ஆசிய குத்துச்சண்டை போட்டி: தங்கம் வென்ற பூஜாராணி

பெண்கள் பிரிவில் நேற்றிரவு நடந்த 75 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பூஜாராணி 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் மாவ்லோனோவாவை எளிதில் வென்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

தங்கப்பதக்கம் வென்ற பூஜாராணிக்கு ரூ.7 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

From around the web