81 ரன்களுக்கு சுருண்டது இந்தியா! தொடரை கைப்பற்றியது இலங்கை!

 
81 ரன்களுக்கு சுருண்டது இந்தியா! தொடரை கைப்பற்றியது இலங்கை!

இலங்கையில் நடைப்பெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் நேற்று மோதிய நிலையில், 81 ரன்களுக்கு சுருண்டது இந்தியா. நேற்றைய போட்டியில் தோற்றதன் மூலம் டி 20 போட்டி தொடரைக் கைப்பற்றியது இலங்கை.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து டி20 தொடரில் இரு போட்டிகள் முடிந்த நிலையில், தலா ஒரு வெற்றியுடன் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 3வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் 81 ரன்களுக்குள் சுருண்டு இந்திய அணி அதிர்ச்சியளித்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 23 ரன்கள் (நாட் அவுட்) எடுத்திருந்தார். இலங்கை சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது, தொடர் நாயகன் விருது ஆகிய இரு விருதுகளையும் இலங்கை அணி வீரர் ஹசரங்கா பெற்றார்.

From around the web