இந்தியா-இலங்கை 20 ஓவர் தொடர்: குருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா காரணமாக இன்றைய போட்டி ரத்து.

 
இந்தியா-இலங்கை 20 ஓவர் தொடர்: குருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா காரணமாக இன்றைய போட்டி ரத்து.

இந்தியா-இலங்கை இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித்தொடர் ஜூலை 13ம் தேதி இலங்கையில் உள்ள கொழும்பில் தொடங்க இருக்கிறது. இந்த தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்றுள்ளது.

இலங்கைக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் T20 ஓவர்கள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-இலங்கை 20 ஓவர் தொடர்: குருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா காரணமாக இன்றைய போட்டி ரத்து.

இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் T20 ஓவர் ஆட்டத்தில் இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா-இலங்கை 20 ஓவர் தொடர்: குருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா காரணமாக இன்றைய போட்டி ரத்து.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது T20 ஓவர் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்றிரவு (செவ்வாய்க்கிழமை) 8 மணிக்கு நடைபெற இருந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரரும், ஆல்-ரவுண்டருமான குருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று( செவ்வாய்க்கிழமை) நடைபெறவிருந்த டி20 ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்ற வீரர்கள் அனைவருக்கும் நோய்த் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டால், 2-வது டி20 ஆட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறும், தற்போது வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

From around the web