சீனாவின் ஸ்பான்சரை நீக்கிய இந்திய அணி! குவியும் பாராட்டுக்கள்!

 
சீனாவின் ஸ்பான்சரை நீக்கிய இந்திய அணி! குவியும் பாராட்டுக்கள்!


32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்டு 8 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கான சீருடை உட்பட விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சீனாவைச் சேர்ந்த லி நிங் என்ற விளையாட்டு பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ ஸ்பான்சர் ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்டு இருந்தது.


இந்தியாவிற்கும், சீனாவிற்கும் எல்லை பிரச்சனையில் பனிப்போர் நிலவி வரும் நிலையில் சீன நாட்டை சேர்ந்த நிறுவனத்துடன் இந்திய ஒலிம்பிக் சங்கம் ஸ்பான்சர் ஒப்பந்தம் செய்ததற்கு கடும் எதிர்ப்புக்கள் உருவாகின. இந்த கோரிக்கைகளை ஏற்கும் வகையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் ‘கிட்ஸ்’ ஸ்பான்சர் ஒப்பந்தத்தில் இருந்து லி நிங் நிறுவனம் விடுவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஸ்பான்சரை நீக்கிய இந்திய அணி! குவியும் பாராட்டுக்கள்!


இது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘சீன நிறுவனம் ஸ்பான்சரில் இருந்து நீக்கப்பட்ட விஷயத்தில் யாருடைய பெயரையும் இழுக்க விரும்பவில்லை. மீடியாக்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் இருந்து வந்த விமர்சனங்கள், சர்ச்சைகள், கோரிக்கைகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணிக்கு புதிய ஸ்பான்சருக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அதற்கான காலம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஸ்பான்சருக்காக யாருக்கும் நெருக்கடி கொடுக்க முடியாது. ஸ்பான்சர் ஒப்பந்தம் பரஸ்பர சம்மதம் கொண்டதாக இருக்க வேண்டும். இந்திய அணியினரின் சீருடையில் ஸ்பான்சர் பெயர் இடம் பெறுவது குறித்தும் இந்த மாத இறுதிக்குள் முடிவு செய்யப்படும்.


இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அல்லது போட்டி அமைப்பு குழுவிடம் இருந்து அப்படி எந்த தகவலும் வரவில்லை. ஆனாலும் இந்த விஷயத்தில் தெளிவான நிலையை தெரிவிக்குமாறு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விகிதத்தில் மற்ற பல நாடுகளை விட இந்தியா நல்ல நிலையில் தான் இருக்கிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் அங்கம் வகிப்பவர்களின் சீருடையில் இந்தியா என்று மட்டுமே பொறிக்கப்பட்டு இருக்கும் . எந்த ஸ்பான்சர் நிறுவனத்தின் பெயரும் இடம் பெறாது என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

From around the web