ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: நவம்பர் 19-ந் தேதி தொடங்குகிறது

 
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: நவம்பர் 19-ந் தேதி தொடங்குகிறது

11 அணிகள் பங்குபெறும் 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடருக்கான முதல் கட்ட போட்டி அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது. போட்டிகள் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் வரும் நவம்பர் 19-ந் தேதி முதல் நடைபெறுகிறது.

தொடக்க லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான்-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.

மொத்தம் 115 ஆட்டங்களில் தற்போது முதல் 55 ஆட்டங்களுக்கான (ஜனவரி 9-ந் தேதி வரையிலான) அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டு இருக்கிறது. எஞ்சிய போட்டிக்கான அட்டவணை டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மட்டும் 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் முதல் ஆட்டம் இரவு 7.30 மணிக்கும், 2-வது ஆட்டம் இரவு 9.30 மணிக்கும் தொடங்கி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி அட்டவணைக்கு இங்கே கிளிக் செய்யவும்

From around the web