மிஷன் ஆக்சிஜன்’ காக ரூ.1 கோடி நன்கொடை!சச்சின் டெண்டுல்கர்!

 
மிஷன் ஆக்சிஜன்’ காக ரூ.1 கோடி நன்கொடை!சச்சின் டெண்டுல்கர்!

இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. முழுவதும் ஆக்சிஜன் இறக்குமதி செய்வதற்கும், கொரோனாவுடன் போராடும் மருத்துவமனைகளுக்கு அவற்றைக் கிடைக்கச் செய்வதற்கும் “மிஷன் ஆக்சிஜன்” என்ற நிறுவனத்திற்கு சச்சின் டெண்டுல்கர் ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

மிஷன் ஆக்சிஜன்’ காக ரூ.1 கோடி நன்கொடை!சச்சின் டெண்டுல்கர்!

இது குறித்து சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனாவின் இரண்டாவது அலை பெரும் சுகாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான தீவிர கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனை வழங்குவது காலத்தின் தேவையாக உள்ளது. மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் தவிப்பதை பார்த்து மனம் வலிக்கிறது.

இச்சூழலில், 250க்கும் அதிகமான இளம் தொழில் முனைவோர் குழு, ஆக்சிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்வதற்கும், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு நன்கொடை அளிப்பதற்கும் நிதி திரட்டுவதற்காக மிஷன் ஆக்ஸிஜன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் நானும் பங்காற்றியுள்ளேன். அவர்களின் முயற்சி விரைவில் இந்தியா முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளுக்கு சென்றடையும் என்று நம்புகிறேன்.

நான் விளையாடும் போது நீங்கள் அளித்த ஆதரவு விலைமதிப்பற்றது. அது எனக்கு வெற்றிபெற உதவியது. அதேபோல், இன்று இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராட கடுமையாக உழைக்கும் அனைவருக்கும் பின்னால் நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

From around the web