அதிர்ச்சி! இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா!

 
அதிர்ச்சி! இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அங்கு இந்தியா நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி விளையாடியது. அதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கும் இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி அங்கேயே தங்கியுள்ளது.
இந்திய அணியினர் அனைவரும் இங்கிலாந்தில் தங்களது குடும்பத்துடன் தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் இந்திய வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருவருக்கு லேசான அறிகுறிகள் இருந்ததால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்பு 10 நாள்கள் கழித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு வீரருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது.
இதனையடுத்து மற்றொரு வீரர் தன்னுடைய 10 நாள் தனிமைப்படுத்துதலை ஜூ லை 18ம் தேதி நிறைவு செய்கிறார். அப்போது மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web