அதிர்ச்சி! ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா!

 
அதிர்ச்சி! ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா!

ஒலிம்பிக் போட்டிகள் துவங்குவதற்கு இன்னும் ஆறு தினங்களே உள்ள நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

‘ஒலிம்பிக் கிராமத்தில்’ முதல் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, அந்த கிராமத்தில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர், வீராங்கனைகளையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர், ஒலிம்பிக் கிராமத்திற்கு வெளியே உள்ள ஒரு விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ல் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web