அதிர்ச்சி! சிஎஸ்கே வீரர் மருத்துவமனையில் அனுமதி!

 
அதிர்ச்சி! சிஎஸ்கே வீரர் மருத்துவமனையில் அனுமதி!

உலகம் முழுவதும் கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.
அபதாபியில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் – பெஷாவர் ஷால்மி ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டேவிட் மில்லர் அடித்த பந்தை தடுப்பதற்காக டூப்ளசிஸ் ஓடினார்.

அப்போது எதிரே சக வீரர் முகமது ஹஸ்னைன் ஓடிவந்தார். அப்போது டூப்ளசிஸ் தலை ஹஸ்னைன் காலில் மோதியது. இதனையடுத்து டூப்ளசிஸ் சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் அடுத்து வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டூப்ளசிஸ் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web