தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: 8 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்தியா

 
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: 8 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்தியா

மாலத்தீவில் நடைபெற்று வரும் 13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியா, நடப்பு சாம்பியன் மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம், இலங்கை ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இதில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொண்டது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், ஷாட் அடிப்பதிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: 8 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்தியா

இந்த நிலையில் நேற்றிரவு (சனிக்கிழமை) 8.30 மணிக்கு தொடங்கிய சாம்பியன் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் 7 முறை சாம்பியனான இந்திய, நேபாள அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 49-வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி முதலாவது கோல் அடித்து இந்திய அணியின் கணக்கை தொடங்கி வைத்தார். இது அவரது 80-வது சர்வதேச கோலாகும். இதன் மூலம் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சியை (80 கோல்) சமன் செய்துள்ளார்.

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: 8 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்தியா

அதை தொடர்ந்து சுரேஷ் வாங்ஜாம் ஆட்டத்தின் (50-வது நிமிடம்), சஹால் சமாத் (90-வது நிமிடம்) ஆகியோரும் கோல் அடிக்க இந்திய அணி 3 – 0 என்ற கோல் நேபாளத்தை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

1993-ம் ஆண்டு முதல் நடந்து வரும் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி இந்த கோப்பையை வெல்வது இது 8-வது முறையாகும்.

From around the web