தமிழ்நாடு பிரிமீயர் லீக்: தொடக்க ஆட்டம் மழையால் ரத்து

 
தமிழ்நாடு பிரிமீயர் லீக்: தொடக்க ஆட்டம் மழையால் ரத்து

ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமியர் லீக் நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி 5வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

முதல் நாளான நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி, டேரில் பெராரியோ தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின.

தமிழ்நாடு பிரிமீயர் லீக்: தொடக்க ஆட்டம் மழையால் ரத்து

டாஸ் வென்ற சேலம் அணி, கோவை கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. கோவை அணியின் துவக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜு அதிரடியாக ஆடி 33 ரன்கள் குவித்து, கணேஷ் மூர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் இணைந்த கவின்-சாய் சுதர்சன் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பந்துகளை சிக்சர்களாகவும், பவுண்டரிகளாகவும்விரட்டினர் சாய் சுதர்சன், 43 பந்துகளை எதிர்கொண்ட 8 பவுண்டரி, 5 சிக்சர்களில் உள்பட 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

தமிழ்நாடு பிரிமீயர் லீக்: தொடக்க ஆட்டம் மழையால் ரத்து

முன்னதாக கவின் 33 ரன்களிலும், கேப்டன் ஷாருக்கான் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். முகிலேஷும் ஒரு ரன் மட்டுமே எடுத்து, ரன்அவுட் ஆனார்.

18 ஓவர் முடிவில் கோவை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மைதானத்தில் நிலவிய ஈரப்பதத்தை உலர வைக்க எடுத்த முயற்சி தோல்வி அடைந்ததால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டடு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

From around the web