டோக்கியோ ஒலிம்பிக்: காலை 8 மணிக்கு மேல் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள்

 
டோக்கியோ ஒலிம்பிக்: காலை 8 மணிக்கு மேல் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடைபெறும் 32-வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.

இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு:-

துப்பாக்கி சுடுதல்

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள்: தீபக்குமார், திவ்யான்ஷ் சிங் பன்வார், தகுதி சுற்று காலை 9.30 மணி.

பாய்மர படகு

பெண்களுக்கான லேசர் ரேடியல்: நேத்ரா குமணன், காலை 8.35 மணி முதல்.

ஆண்களுக்கான லேசர் ஸ்டான்டர்டு: விஷ்ணு சரவணன், காலை 11.05 மணி முதல்.

டேபிள் டென்னிஸ்

ஆண்களுக்கான ஒற்றையர் 2-வது சுற்று: சத்யன்-சு ஹாங் லாம் (ஹாங்காங்), காலை 10.30 மணி.

பெண்களுக்கான ஒற்றையர் 2-வது சுற்று: மனிகா பத்ரா-மார்கரிதா பிசோட்ஸ்கா (உக்ரைன்), பகல் 12 மணி.

குத்துச்சண்டை

பெண்களுக்கான தொடக்க சுற்றில் (51 கிலோ) மேரிகோம்-மிகுலினா ஹெர்னாண்டஸ் கார்சியா (டொமினிக்கன் குடியரசு), பகல் 1.30 மணி.

ஆண்களுக்கான தொடக்க சுற்றில் (63 கிலோ) மனிஷ் கவுசிக்-லுக் மெக்கோர்மாக் (இங்கிலாந்து), பிற்பகல் 3.06 மணி.

ஆக்கி

இந்தியா-ஆஸ்திரேலியா (ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம்), பிற்பகல் 3 மணி.

நீச்சல்

பெண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் தகுதி சுற்று: மானா பட்டேல், பிற்பகல் 3.32 மணி.

ஆண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் தகுதி சுற்று: ஸ்ரீஹரி நடராஜ், மாலை 4.26 மணி.

From around the web