டோக்கியோ ஒலிம்பிக்: மல்யுத்த அரையிறுதி போட்டியில் இந்தியவின் தீபக் புனியா அதிர்ச்சி தோல்வி

 
டோக்கியோ ஒலிம்பிக்: மல்யுத்த அரையிறுதி போட்டியில் இந்தியவின் தீபக் புனியா அதிர்ச்சி தோல்வி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடைபெறும் 32-வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.

இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், அமெரிக்க வீரர் டேவிட் டெய்லரை எதிர்கொண்டார் தீபக் புனியா.

ஆனால் அரையிறுதி ஆட்டம் அவருக்கு கடும் சவாலாக இருந்தது. ஆட்டத்தின் துவக்கம் முதலே அமெரிக்க வீரரை எதிர்கொள்ள முடியாமல் தீபக் புனியா திணறினார்.

அவரை ஒரு புள்ளிகள் கூட எடுக்க விடாமல் அமெரிக்க வீரர் தாக்குதல் தொடுத்தார். இறுதியில், தீபக் புனியா 0-10 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தார்.

தீபக் புனியா நாளை வெண்கல பதக்கத்திற்காக விளையாடுகிறார்.

From around the web