ஆட்சியர் அலுவலகத்தை விட்டு நகராத ஜோதிமணி- தொடரும் போராட்டம்..!!

 
ஆட்சியர் அலுவலகத்தை விட்டு நகராத ஜோதிமணி- தொடரும் போராட்டம்..!!

மத்திய அரசின் சமூக நீதி துறையின் மூலம் நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் கரூர் மாவட்டத்தில் இன்னும் இத்திட்டம் செயல்படுத்தப்பட ஆட்சியர் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முற்பகலில் தனது போராட்டத்தை துவங்கியவர், இன்னும் தொடர்ந்து வருகிறார்.

ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் படுத்துறங்கி, லேப்டாப்பில் பணிகளை செய்து வருகிறார். மேலும் கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

இதற்கிடையில் கரூர் எம்.பி. ஜோதிமணியை சந்தித்த ஆட்சியர் பிரபு சங்கர் அவரை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் நலத்திட்ட முகாம் தேதிகளை அறிவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவேன் என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

From around the web