கொரோனாவை பெரும் சவாலாக ஏற்று மோடி செயல்படுகிறார்! ராணுவ அமைச்சர் புகழாரம்!

 
கொரோனாவை பெரும் சவாலாக ஏற்று மோடி செயல்படுகிறார்! ராணுவ அமைச்சர் புகழாரம்!

இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்புக்களும், உயிரிழப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ராணுவ அமைச்சர் கொரோனா குறித்து விடுத்த செய்திக்குறிப்பில் கொரோனா நோயாளிகளை கையாளுவதில் உத்தரபிரதேச அரசு காட்டும் வேகத்தைப் பாராட்ட வேண்டும்.

கொரோனாவை பெரும் சவாலாக ஏற்று மோடி செயல்படுகிறார்! ராணுவ அமைச்சர் புகழாரம்!

விமர்சனத்துக்கான நேரம் இதுவல்ல. மற்றவர்கள் யாரும் குறைபாடுகளை சுட்டிக்காட்டினால், அவற்றை ஏற்க மாநில அரசு தயாராகவே உள்ளது. கொரோனா விஷயத்தில் உத்தரபிரதேச அரசின் செயல்பாட்டை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.

பிரதமர் மோடி பெரும் சவாலாக கொரோனாவை ஏற்றுச் செயல்பட்டு வருகிறார். கொரோனா நெருக்கடியைச் சமாளிப்பதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன.

நெருக்கடியான நேரத்தில் உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவி வருகின்றன. கொரோனாவால் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் எனத் தெரிவித்துள்ளார்.

From around the web