கொரோனா பயத்தால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை!
Jun 11, 2021, 08:16 IST
கொரோனா குறித்து ஏற்பட்ட பயத்தால், கிருஷ்ணகிரி அருகே 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி, மில்லத் நகரில் வசித்து வருபவர் மாதேஸ்வரன். இவரது மகள் ஜீவிதா (16). அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஜீவிதா 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், ஜீவிதாவிற்கு கடந்த ஒரு வாரமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சீராகவில்லை என கூறப்படுகிறது.
உடல்நிலை சரியில்லாத தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கருதிய ஜீவிதா, மனமுடைந்து சோகமுடன் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஜீவிதா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
From around the
web