+2 ரிசல்ட் மதிப்பெண்களுடன் நாளை வெளியீடு!

 
+2 ரிசல்ட் மதிப்பெண்களுடன் நாளை வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுடைய மதிப்பெண்கள் வழங்கும் முறை குறித்து பள்ளித் தேர்வுத் துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 50 சதவீதம், பிளஸ்1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ்2 செய்முறை தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

+2 ரிசல்ட் மதிப்பெண்களுடன் நாளை வெளியீடு!

அந்த வகையில் மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் ஜூலை 19ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகிறது.

+2 ரிசல்ட் மதிப்பெண்களுடன் நாளை வெளியீடு!

+2 தேர்வு முடிவுகள் தயாராக உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, “பிளஸ் 2 மதிப்பெண்கள் தயார் நிலையில் இருக்கிறது; மீண்டும் ஒரு முறை சரிபார்த்து விரைவில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும்” என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web