கூடுதல் தளர்வுகள் ஒரு பார்வை

 
கூடுதல் தளர்வுகள் ஒரு பார்வை

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு வரும் ஜூலை 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • அனைத்து மாவட்டங்களிலும் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி.
  • வணிக வளாகங்கள் (Shopping Complex/ Mall ) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி.
  • உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி மையங்கள் உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்பட அனுமதி.
  • துணிக்கடைகள், நகைக்கடைகள், உரிய காற்றோட்ட வசதியுடன் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 50% பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி
  • பொழுதுபோக்கு/ கேளிக்கை பூங்காக்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
  • தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்படும்.
  • மாவட்டத்திற்குள்ளேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணிக்க அனுமதி.
  • மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் மற்றும் இ-பதிவு நடைமுறை ரத்து.
  • அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி;
  • பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி இல்லை; தடை தொடரும் என அறிவிப்பு.
  • நீச்சல் குளம், திரையரங்குகள் மற்றும் மதுபானக்கூடத்திற்கு (Bar) தடை தொடரும்.
  • திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.
From around the web