இந்த 3 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது!!!

 
இந்த 3 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது!!!

சபரிமலை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை கொண்ட சிறப்பு கட்டண ரயில் இயக்குவதற்கு ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – கொல்லம் – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டிசம்பர் 3, 10, 17, 24, 31, ஜனவரி-7, 10, 12, 14 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்பட்டும் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு கட்டண வண்டி (6007) மறுநாள் காலை 8.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

இந்த 3 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது!!!

மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து டிசம்பர்-5, 12, 19, 26, ஜனவரி-2, 9, 11, 13, 16 ஆகிய தேதிகளில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டும் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு கட்டண வண்டி (6008) மறுநாள் அதிகாலை 4 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இதேபோல் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்: சென்னை எழும்பூரில் இருந்து வரும் டிசம்பர் 23 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் வண்டி (06005) மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோயில் சென்றடையும்.

இந்த 3 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது!!!

மறுமார்க்கத்தில் டிசம்பர் 24 ஆம் தேதி நாகர்கோயிலில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டும் அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் வண்டி (06006) மறுநாள் காலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

மேலும் நாகர்கோவில் சந்திப்பு – தாம்பரம் – நாகர்கோவில் சந்திப்பு முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் வண்டி (06004) டிசம்பர் 26 ஆம் தேதி நாகர்கோயிலில் இருந்து மாலை 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த 3 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது!!!

மறுமார்க்கத்தில் டிசம்பர் 27 ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் வண்டி (06003) மறுநாள் காலை 4.20 மணிக்கு நாகர்கோயில் சென்றடையும்.

இந்த 3 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (நவம்பர் 28) காலை 8 மணி முதல் தொடங்குகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

From around the web