BREAKING! நடிகர் விஜயகாந்த் மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதி!

 
BREAKING! நடிகர் விஜயகாந்த் மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதி!

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பாதிப்புக்களுக்கேற்ப கட்டுப்பாடுகளும், ஊரடங்கும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்புக்களும், உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் மே 24 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைத்துறையினர், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பாரபட்சமின்றி பரவிவருவதாலும் , கொத்து கொத்தாக மக்கள் உயிரிழப்பு அதிகரித்திருப்பதாலும் மக்களிடையே அச்சமும் , பதற்றமும் உருவாகியுள்ளது.

இந்நிலையில் தேமுதிக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் அதிகாலை 3 மணி அளவில் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு திடீரென நள்ளிரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web