தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

 
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள்‌, வட கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, சேலம்‌, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ அநேகமாக வறண்ட வானிலயையும்‌, ஒரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

From around the web