இ-பதிவில் மீண்டும் மாற்றம்!

 
இ-பதிவில்  மீண்டும் மாற்றம்!

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து இன்று முதல் மே 31 வரை தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இ-பதிவில்  மீண்டும் மாற்றம்!

இந்நிலையில், ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் தடையின்றி செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.  இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

இ-பதிவில்  மீண்டும் மாற்றம்!

மே 25 முதல் தொழிற்சாலை பணியாளர்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது.

மே 25 முதல் தொழிற்சாலைகளின் வாகனங்கள் இ-பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மே 25 முதல் தொழிற்சாலைகள் இ-பதிவு செய்துள்ள வாகனங்களில் மட்டுமே பணியாளர்களை அழைத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இ-பதிவில்  மீண்டும் மாற்றம்!

தொழிலாளர்களை அழைத்து வர 4 சக்கர வாகனங்களை ஏற்படுத்துக் கொள்ளவும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் செயல்பட ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web