மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

 
மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் 14 ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில் மேலும் ஒரு வாரம், அதாவது ஜூன் 21-ந் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகமுள்ள 11 மாவட்டங்களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை நாளை காலை 11 மணிக்கு காணொலி மூலம் நடைபெறுகிறது. அப்போது மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள, எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படலாம்.

From around the web