எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..!!

 
எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..!!

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். கடந்த 21-ம் தேதி வழக்கம் போல அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

பூலாங்குடி காலனியில் அவர் இருந்த போது மர்ம நபர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வதை பார்த்துவிட்டு, அவர்களை துரத்தினார். அப்போது நடந்த மோதலில் எஸ்.எஸ்.ஐ பூமிநாதனை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளரை பிடிக்க 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. திருச்சி தோகூர் பகுதியில் மறைந்திருந்த 10 வயது சிறுவன், 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதை தொடர்ந்து எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், அவருடைய குடும்பத்தாருக்கு ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி தலைமைச் செயலகத்தில் அவருடைய குடும்பத்தினரை நேரில் சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின் பூமிநாதன் குடும்பத்தாரிடம் ரூ. 1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

From around the web