எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்! சபாநாயகர்!

 
எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்! சபாநாயகர்!


தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு 16வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர், கவர்னர் உரையுடன் ஜூன் 21ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் மு.அப்பாவு விடுத்த செய்திக்குறிப்பில் தமிழக சட்டசபையில் ஜூன் 21ல் கவர்னர் உரைக்கு பின் சட்டமன்ற அலுவல் குழு கூட்டம் நடைபெறும்.

எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்! சபாநாயகர்!

இந்த சட்டமன்ற கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும்? என்னென்ன பணிகள் என்பது குறித்து அதில் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமன்ற கூட்டத் தொடர், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் எனவும், சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க வரும் எம்.எல்.ஏ.க்கள், பணியாற்றுபவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.


கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றி சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என தெரிவித்துள்ளார். அவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்புவது குறித்தும் ஆலோசிக்கபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

From around the web