உற்சாகத்தில் மாணவர்கள்! பாடத்திட்டங்கள் குறைப்பு..!

 
உற்சாகத்தில் மாணவர்கள்! பாடத்திட்டங்கள் குறைப்பு..!


இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா குறைந்த போதிலும் 3 வது அலை வரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 2020 – 2021ம் கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் இரண்டு பருவங்களாக பிரித்து செயல்படுத்தப்படும் என சிபிஎஸ்இ போர்டு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

உற்சாகத்தில் மாணவர்கள்! பாடத்திட்டங்கள் குறைப்பு..!


இந்நிலையில் தற்போது சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நடப்பு கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இவை ஏற்கெனவே இரண்டு பருவங்களாக பிரிக்கப்பட்ட நிலையில், எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்களும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, இரண்டு பருவத்திற்கும் பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண்கள் 50 சதவீதமாக பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள், மதிப்பெண்கள் பிரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் குறித்த விவரங்களை www.cbscacademic.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web