முதல் முறையாக 17.40 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன

 
முதல் முறையாக 17.40 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன

தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இந்தியாவில் 3 வது அலை வரலாம் என மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் தான் அடுத்த வரவுள்ள கொரோனா அலைகளை தவிர்க்க முடியும்.

தமிழகத்திற்கு இதுவரை இல்லாத அளவாக முதல் முறையாக 17.40 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவில் இருந்து இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து மாநில தொகுப்புக்கு குளிரூட்டும் வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்படவுள்ளது.

From around the web