கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராகுங்கள்!மத்திய ,மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை !

 
கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராகுங்கள்!மத்திய ,மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை !


தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்புக்களும், உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து நாடு முழுவதும் படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிரது. தமிழகத்தில் ஆக்சிஜனை தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராகுங்கள்!மத்திய ,மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை !

தற்போது ஆக்சிஜன் தயாரிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஸ்டெர்லைட்டில் இருந்து ஆக்சிஜன் கிடைக்க காலதாமதமாகும் என்று கூறப்படுகிறது.இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான வழக்கில் மே 15 முதல் ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும். நாளொன்றுக்கு தமிழகத்திற்கு 475 ஆக்சிஜன் தேவை என்ற நிலையில் 419 டன் ஆக்சிஜன் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராகுங்கள்!மத்திய ,மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை !

இந்தியா முழுவதும் ஆக்சிஜன் தேவை அதிகரிப்பதால் ஆக்சிஜன் உற்பத்தி வசதிகளை ஏற்படுத்த வேண்டும். 3வது அலை தாக்கும் அபாயம் உள்ளதால் தயார் நிலையில் இருக்க வேண்டும். மோசமான நிலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தவிர தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்துகளை தடையின்றி கிடைக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

From around the web