தத்து கொடுக்கப்பட்ட குழந்தை..!! மீண்டும் குழந்தையை கேட்ட தாய்..!!

 
தத்து கொடுக்கப்பட்ட குழந்தை..!! மீண்டும் குழந்தையை கேட்ட தாய்..!!

தத்துகொடுக்கப்பட்ட குழந்தையை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்கக் கோரி பெற்ற தாய் தொடர்ந்த வழக்கில் உணர்ச்சிக்கரமான தீர்ப்பை வழங்கியுள்ளது மாவட்ட நீதிமன்றம்.

சேலம் அம்மாபேட்டையச் சேர்ந்த சத்யா தன்னுடைய அண்ணன் சிவக்குமார் மற்றும் அண்ணி சரண்யாவுக்கு தனக்கு பிறந்த பெண் குழந்தையை தத்து கொடுத்துவிட்டார். கடந்த 2019-ம் ஆண்டு சிவக்குமார் புற்றுநோயால் இறந்துபோனார்.

தத்து கொடுக்கப்பட்ட குழந்தை..!! மீண்டும் குழந்தையை கேட்ட தாய்..!!

அதையடுத்து மகளை தன்னுடைய அண்ணி திருப்பி தர வேண்டும் என்று கூறி அம்மாபேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதனால் சிறுமி காப்பாகத்தில் இருந்தர. இந்நிலையில் சிறுமியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி, சரண்யாவும், வளர்ப்பு தாய் சத்யாவும் தனித்தனியே ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர்.

தத்து கொடுக்கப்பட்ட குழந்தை..!! மீண்டும் குழந்தையை கேட்ட தாய்..!!

நீதிபதிகள் பி.என் பிரகாஷ் மற்றும் மஞ்சுளா அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதன்மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதன்படி, சிறுமியை வளர்ப்பு தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு வெளியானது. மேலும் பெற்ற தாய் சிறுமியை வாரம் ஒருமுறை பார்க்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

From around the web