அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு! தமிழக அரசு!

 
அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு! தமிழக அரசு!


தமிழகத்தில் கொரோனா காரணமாக சென்ற மார்ச் மாதம் முதல் ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையும், மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்களும் வழங்கப்பட வேண்டும்.இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பள்ளிக்கு வர உத்தரவிடப் பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு! தமிழக அரசு!

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை ஆணையர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12ம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்தப்படவில்லை. பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கும் முறை, உயர்க்கல்வி சான்றிதழ்கள் குறித்த பணிகள் நடைபெற உள்ளன.
இது தவிர இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு! தமிழக அரசு!

அத்தோடு கூட மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களையும், கற்றல், கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்களையும் வழங்க வேண்டும்.
எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜூன்14 முதல் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

From around the web