நாளை விடைபெறுகிறார் பன்வாரிலால் புரோகித் !
Sep 13, 2021, 19:16 IST
இன்று சட்டமன்ற பேரவைக் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது.இதன் பிறகு சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதல்வர் சந்தித்து பேசியுள்ளார்.
தமிழக ஆளுநர் தற்போது பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில் முதல்வர் மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசுகிறார். இன்றுடன் அவரது பணிக்காலம் தமிழகத்தில் ஆளுநராக பணியாற்றியதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இன்றுடன் பணிகளை முடித்துக் கொண்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை காலை 8:30 மணிக்கு தமிழகத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறார்.
From around the
web