தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

 
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று தொடங்கியுள்ள நிலையில், இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளிலும், 29 மற்றும் 30ம் தேதிகளில் வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

From around the web