தமிழகத்தில் 2 நாட்களில் +2 மதிப்பெண் வெளியீடு?

 
தமிழகத்தில் 2 நாட்களில் +2 மதிப்பெண் வெளியீடு?

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, கடந்தாண்டு முதலே ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, பத்தாம் மற்றும் +2 படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

தமிழகத்தில் 2 நாட்களில் +2 மதிப்பெண் வெளியீடு?

இந்நிலையில், +2 வகுப்பில் மதிப்பெண்கள் வழங்கும் முறை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின் படி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களில் 50 சதவிகித மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத்து முறையில் பெற்ற 20 சதவிகித மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வு மற்றும் அக மதிப்பீட்டில் இருந்து 30% மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்னும் இரு தினங்களில் +2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியாக வாய்ப்புள்ளது என தகவல்கள் கூறுகின்றன. +2 வகுப்புகளுக்கான மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வுத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில், மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவு பெற்றதால் முன்னதாகவே +2 மதிப்பெண்களை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இம்மாதம் இறுதிக்குள் +2 மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில் முன்னதாகவே வெளியிட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

From around the web