இன்று முதல் ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி!

 
இன்று முதல் ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் மு.க.ஸ்டாலின்.தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வாழ்வாதாரத்தை சீரமைக்கும் பொருட்டு ஊரடங்கு கால நிவாரணமாக ரேசன் கார்டு அட்டைதாரர்களுக்கு, 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

இன்று முதல் ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி!


அதில் முதல் தவணையாக மே மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார். ரேசன் கடைகளில் கூட்டம் சேர்வதை தடுக்க வீடு வீடாக டோக்கன் விநியோகிக்கப்பட்டது.இந்த சூழலில் இன்று முதல் ரேசன் கடைகளில் தினமும் 200 பேருக்கு நிவாரண தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இன்று முதல் ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி!

தினமும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, பணம் வழங்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமையான மே 16ம் தேதியில் கூட ரேசன் கடைகளில் கொரோனா நிவாரண நிதியை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web