9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு!

 
9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு!


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக வகுப்புக்கள் ஆன்லைன் மூலமும் கல்வி தொலைக்காட்சி மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது 2வது அலை குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு!

இது குறித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் விடுத்த செய்திக்குறிப்பில் “தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்தேன்.அப்போது அவரிடம், ‘ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு முழுமையான அளவு பாடங்களை நடத்த முடியவில்லை.

9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு!

எனவே, தமிழகத்தில் விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தேன். அதற்கு அவர், ‘9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என அமைச்சர் உறுதியளித்தார்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் ஜூலை 16ம் தேதி முதல் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web