காலையிலே அதிர்ச்சி! இன்று (மே 21) மீண்டும் உயரத் தொடங்கிய பெட்ரோல், டீசல் விலை

 
காலையிலே அதிர்ச்சி! இன்று (மே 21) மீண்டும் உயரத் தொடங்கிய பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னையில் நேற்று(மே 19) பெட்ரோல் லிட்டர் 94.54 ரூபாய், டீசல் லிட்டர் 88.34 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் (மே 21) இன்று பெட்ரோல் விலை 17 காசுகள் உயர்ந்து லிட்டர் 94.71 ரூபாய்க்கும், டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து லிட்டர் 88.62 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

From around the web